சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூர் ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி அப்துல் கலாம் பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளி மற்றும் பிற பள்ளி மாணவர்களும் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 21 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு 6 பேர் முதலிடம், 12 பேர் இரண்டாமிடம், 3 பேர் முன்றாமிடமும் பெற்று சாதனை படைத்தனர். எட்டு வயதுக்குட்பட்ட பிரிவில் ஜெகவிர் இராண்டாம் இடம், ஜெக்ஸன் கில்பர்ட் இராண்டாம் இடம், ஸ்ரீ செசாந் இராண்டாம் இடம், பெண்கள் பிரிவில் சங்கமித்ரா இராண்டாம் இடம், குகா ஸ்ரீ முன்றாம் இடம் பெற்றனர்.
பத்து வயதுக்குட்பட்ட பிரிவில் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி மாணவர் தஸ்வந்த் முதல் இடம், ஸ்டேட்ஸன ரோஜர் இரண்டாம் இடம், கமலேஷ் இராண்டாம் இடம், ரோஹித் இராண்டாம் இடம், சித்தார்த் இராண்டாம் இடம்,பிரஜித் இராண்டாம் இடம், முகமது அல் ரிலா முன்றாம் இடம் பெற்றனர், பண்ணிரெண்டு வயதுக்குட்பட்ட பிரிவில் டின் சாஹிம் முதல் இடம், கிஷார் இரண்டாம் இடம், பெண்கள் பிரிவில் ஏன்ஜல் இராண்டாம் இடம், முகமது ரேஹான் இராண்டாம் இடம் பெற்றனர். பதினான்கு வயதுக்குட்பட்ட பிரிவில் பிரஜித் முதல் இடம், ஹரி பிரசாத் முதல் இடம், ஜெஸ்வின் முதல் இடம், தியானேஸ் முதலிடமும், ஆஸ்சிவ் இராண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை, பயிற்சியாளர் மணிகண்டபிரபுவை பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


