Friday, March 29, 2024
Homeபரமக்குடிபரமக்குடி வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பரமக்குடி வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பரமக்குடி வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பொதுப்பணித்துறை அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல் மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பார்த்திபனூர் மதகு அணைக்கு வரும் வெள்ள நீர் அளவானது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அதிகரிக்க கூடும்

இதனால் அக்.18 காலை 7 மணிக்கு மேல் 12359 கன அடி பெர் வினாடிக்கு கன அடி தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணைக்கு வைகை ஆற்றில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. விரகனூர் மதகு அணை வெளியேற்றும் நீரின் அளவை கருத்தில் கொண்டு மேலும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை

எனவே பார்த்திபனூர் மதகு அணை வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவரும் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, வைகை ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments