பரமக்குடியில் தேவரின தியாகிகளுக்கு 64 வீரவணக்கம்
பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் முக்குலத்தேவர் புலிப்படை சார்பில் தேவரின தியாகிகளுக்கு 64 வீரவணக்க நாள் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு முக்குலத்தேவர் புலிப்படையின் பொதுச்செயலாளர் பாண்டித்துரை தலைமை தாங்கினார்.
தேவர் மலர் பாலா, கிருஷ்ணா தியேட்டர் கிழக்குப்பகுதி தேவர் பேரவை தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
முக்குலத்தேவர் புலிப்படை பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
கிழக்குப் பகுதி இளைஞர் பேரவை நிர்வாகிகள் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், கார்த்திக்சேதுபதி, இந்து முன்னணி பொறுப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ், தமிழ்நாடு தேவர் பேரவை பிரவீன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் குமார், முக்குலத்தேவர் புலிப்படை நிர்வாகிகள் ஜோதிபாசு, சபரி, தேவதுரை, பகத்சிங் முக்குலத்தேவர் தொழிற்சங்க அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்குலத்தேவர் புலிப்படை நகர் இளைஞரணி பொறுப்பாளர் பூபதி நன்றி கூறினார்.