Thursday, March 28, 2024
Homeபரமக்குடிஇளையான்குடி பாலம் இல்லாததால் கால்வாயை கடக்க மக்கள் சிரமம்

இளையான்குடி பாலம் இல்லாததால் கால்வாயை கடக்க மக்கள் சிரமம்

இளையான்குடி பாலம் இல்லாததால் கால்வாயை கடக்க மக்கள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் அருகே இளையான்குடி கால்வாயில் தண்ணீர் செல்வதால் மக்கள் கால்வாயைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

மக்களுக்கு வசதியிற்றி

இளையான்குடி அருகேயுள்ள மேலாயூர் ஊராட்சி சிங்கத்துரைப்பட்டியில் 500 -க்கு மேற்பட்ட மக்கள்  மற்றும் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 20 குடும்பங்கள் வசிக்கும் பகுதியான சுப்பன் கால்வாய் என்ற கால்வாயில் இப்பகுதி மக்கள் கால்வாயைக் கடந்து தான் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். இதனால், கால்வாயில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் புகார்

வட கிழக்குப் பருவமழையால் இக்கால்வாயில் தொடர்ந்து 3 வாரங்களாக தண்ணீர் செல்கிறது. இதனால், மக்கள் கால்வாயைக் கடக்கச் சிரமப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கோகுல் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கண்மாய்களில் இருந்து உபரி நீர் திறப்பதாலும் கால்வாயில் தண்ணீர் அதிகமாகச் செல்கிறது.உடல்நலம் பாதித்தோரை கால்வாயைக் கடந்து கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது. பாலம் கேட்டு 7 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.

,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments