Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம

மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம

 மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் .

தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்தார்.

பணிநியமன ஆணையினையம் செய்யப்பட்டது

தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகில், பரமக்குடி வட்டம், கொடிக்குளம் குரூப் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து,  பணியிடையே காலமான மாரிமுத்து என்பவரின் மனைவி கலையரசி  இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும்,

முதுகுளத்தூர் வட்டம், புளியங்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து,  பணியிடையே காலமான சதீஸ் என்பவரின் மனைவி ஜெயசிந்தியா  இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments