ஜனாதிபதி திரௌபதி முர்மு கண்புரை அறுவை சிகிச்சை .
இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரௌபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25 ம் தேதி பதவியேற்றார்.ஜனாதிபதி திரௌபதி முர்மு வெற்றிகரமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்
ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்திய நாட்டின் ஜனாதிபதியான 64 வயதான திரௌபதி முர்மு, இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவரின் ஆலோசனைப்படி ராணுவ மருத்துவமனையில் வலது கண்ணிலும் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கண் புரை அறுவை சிகிச்சை
பின்னர் அக்டோபர் 16ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட திரௌபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பினார் என ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.