பரமக்குடி அரசு மருத்துவமனையில் கைதி தப்பி ஓட்டம்
பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குச்சாமி மகன் அஜித் குமார்(24). இவர் கடந்த 5ம் தேதி நயினார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்டு கொலை முயற்சி வழக்கில் உடம்பில் சிறு சிறு காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
காவலர்கள் பாதுகாப்பு
காயம் காரணமாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி அஜித்குமார் தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தப்பி ஓடிய கைதி அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.