தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட்- 2023ம் மாதத்தில் 12.08.2023 அன்று கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம்,
- இராமநாதபுரம் வட்டம்- மாடக்கொட்டான் கிராமம் (நியாயவிலைக்கடை) /
- இராமேஸ்வரம் வட்டம் – அரியாங்குண்டு கிராமம் (நியாயவிலைக்கடை) /
- திருவாடானை வட்டம் – அரும்பூர் கிராமம் (நியாய விலைக்கடை) /
- பரமக்குடி வட்டம் – மஞ்சக்கொல்லை கிராமம் (இ-சேவை மையக் கட்டிடம் ) /
- முதுகுளத்தூர் வட்டம் – ஆனைச்சேரி கிராமம் (நியாயவிலைக்கடை) /
- கடலாடி வட்டம் – ஆப்பனூர் கிராமம் (நியாயவிலைக்கடை) /
- கமுதி வட்டம் – அ.தரைக்குடி கிராமம் (நியாயவிலைக்கடை) /
- கீழக்கரை வட்டம் – தினைக்குளம் கிராமம் (நியாயவிலைக்கடை) /
- ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் அரியாங்கோட்டை கிராமம் (நியாயவிலைக் கடை)
ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு
- மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல்,
- குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம்,
- புகைப்படம் பதிவேற்றம்,
- பெயர் சேர்த்தல்,
- நீக்கல்,
- முகவரி மாற்றம்,
- கைபேசி எண் பதிவு/
- மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் நியாயவிலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 09 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எதிர் வரும் 12.08.2023 (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.