ராமநாதபுரம் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது
ராமநாதபுரம் வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் நகர், ஆட்சியர் அலுவலகம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.
இதனால் ராமநாதபுரம் நகர் அகில்கிடங்கு தெரு, புதிய, பழைய பேருந்து நிலையம், மதுரையார் தெரு, வடக்குத்தெரு, கேணிக்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் முக்கியப் பகுதிகளில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமம் ஏற்பட்டது. வியாபாரிகள், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.