ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன் பிடித்தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதனிடையே மீன்பிடித் தடைக்காலம் முடிந்த உடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவர் தனது விசைப்படகில் 9 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் கப்பல் பழுதாகி கச்சத்தீவு கடற்பரப்பில் படகு தரை தட்டி நின்றுள்ளது.இந்நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகையும், படகில் இருந்த அந்தோணி, தேசுராஜ், ரூபன் உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
கச்சத்தீவு கடற்பரப்பு அருகே படகு பழுதாகி நின்ற போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக என்று கைது செய்யப்பட்டார் . தமிழக மீனவர்களை இந்திய கடற்படையிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தினர்.