கண்ணுக்கு மைய அழகு, காலுக்கு கொலுசு அழகு, பெண்ணுக்கு கூந்தல் அழகு என்று பலர் சொல்வதை கேட்டிரூப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பதே பெரிய சுமையாக இருக்கிறது.
வெந்தயம்
- வெந்தயத்தை தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து, தலை முடியில் தேய்த்தால் ஒரே வாரத்தில் பொடுகுக்கு குட்பை சொல்லாம்.
- அதே போல், ஊற வைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.
இலுப்பை புண்ணாக்கு
- இலுப்பை புண்ணாக்கை வாங்கி வந்து, இடித்து நன்கு பொடியாக்கி நீரில் கலக்க வேண்டும்.
- இந்த பசையை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை சரியாகும்.
கற்றாழை
- கற்றாழை சாற்றை தலையில் வடு பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பின்பு, கைகள் தலை முடியை மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
- பின்பு, வெது வெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும் வாரம் ஒரு முறை இப்படி செய்தால், பொடுகு தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
பாசிப்பருப்பு
- உடல் உஷ்ணத்தாலும் பலருக்கு பொடு தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலைமுடியில் தடவி 1 மணி ஊற வைக்க வேண்டும்.
- பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.