1900 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வரும் போது, பழங்குடியின மக்களில் ஒரு சிறுமியை ஆங்கிலேயர்கள் அரண்மனைக்கு அழைத்து வருகின்றனர். அந்த சிறுமியை மீட்பதற்காக பழங்குடியின மக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் திட்டம் போடுகிறார்.
அதே சமயம் ஆங்கிலேயர்கள் படையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராம் சரண், தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறார். இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் சிறுமியை மீட்க வந்திருப்பதை அறிந்துக் கொண்ட ஆங்கிலேயர்கள், அவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு சிறப்பு அதிகாரி பதவி கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள்.
இதனால், ஜூனியர் என்டிஆரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் ராம் சரண். இதற்கிடையில் ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ளாமல் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நட்பாகிறார்கள். இறுதியில் ஜூனியர் என்டிஆர் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறுமியை மீட்டாரா? ஜூனியர் என்டிஆரை, ராம் சரண் தடுத்தாரா? இவர்களின் நட்பு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிளஸ்
இயக்குநர் ராஜமெளலியின் இயக்கம், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் முழு அர்ப்பணிப்பான நடிப்பு இசையமைப்பாளர் மரகதமணியின் இசை, கே.கே. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு என காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதம் என அனைத்துமே பிளஸ் ஆகத் தான் உள்ளது.
மைனஸ் என்ன
சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் மார்வெல் ஜிம்மிக்ஸ் போல படம் இருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளது. ராம்சரண், ஜூனியர் என்டிஆரை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை. எப்படி இருந்தாலும், இத்தனை பெரிய பிரம்மாண்ட படைப்பை ரசிகர்கள் தாராளமாக தியேட்டருக்கு சென்று ஒரு முறை பார்க்கலாம்!
இதையும் படியுங்கள் || வருங்கால சூப்பர்ஸ்டார் 2022 – வஞ்சம் தீர்த்தாயடா