Friday, March 29, 2024
Homeசினிமாசமந்தா வின் திடீர் முடிவு, மீண்டும் படம் நடிக வருவாரா! . வரவேற்கும் ரசிகர்கள்

சமந்தா வின் திடீர் முடிவு, மீண்டும் படம் நடிக வருவாரா! . வரவேற்கும் ரசிகர்கள்

சமந்தா வின் திடீர் முடிவு, மீண்டும் படம் நடிக வருவாரா! . வரவேற்கும் ரசிகர்கள்

 

தமிழ் சினிமாவில் கெளதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் சமந்தா. அதுவே அவருக்கு முதல் படமாக அமைந்தது. அடுத்தது பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக களம் கண்டார் சமந்தா. அதன் பின் சில படங்களில் நடித்த சமந்தாவிற்கு விஜய்யின் நடிப்பில் வெளிவந்த கத்தி திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் சமந்தா. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிரபல நாயகியாக வலம் வந்தார். இந்நிலையில் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த சமந்தா திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

மெர்சல், இரும்புத்திரை போன்ற பல வெற்றிப்படங்களில் சமந்தா திருமணத்திற்கு பிறகு நடித்தார். வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கிய சமந்தா கவர்ச்சியில் இறங்கினார். அவர் நடிப்பில் வெளிவந்த பேமிலி மென் வெப் தொடரில் படு கவர்ச்சியாக சமந்தா நடித்திருந்தார். இதன் மூலம் பல சர்ச்சைகளும் எழுந்தது.

அதன்பின் கடந்தாண்டு சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரிவதாக அறிவித்தனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு கடந்தாண்டு பிரிந்தனர். பிரிவிற்கு பிறகும் திரைத்துறையில் ஆர்வமாக நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

ஓ சொல்றியா பாடலில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து அவருக்கு பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவருகிறார் சமந்தா.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. BACHELOR என்ற வெற்றி படத்தை இயக்கிய சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார். தற்போது விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துவரும் கார்த்தி அதை முடித்து விட்டு சதிஷ் செல்வகுமாரின் இயக்கத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதுவரை படத்தில் சேர்ந்து நடிக்காத இவர்கள் முதல்முறையாக நடிகைருக்கின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சமந்தா இனி தொடர்ந்து இதேபோல் பல பாடலுக்கு ஆடுவார் என சில ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் மீண்டும் சமந்தா நாயகியாக பல படங்களில் நடிக்கவிருக்கின்றது பல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் சில ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இருப்பினும் அவ்வப்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல் போன்று ஒரு சில பாடலுக்கு ஆடவேண்டும் என சில ரசிகர்கள் கோரிக்கை வெய்துவருகின்றனர். எனவே சமந்தா மற்றும் கார்த்தி இணையும் புதிய படத்தைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெறித்து கொள்ளுங்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments