ஊரணியிலிருந்து அள்ளப்படும் சவுடு மண்! தடுத்து நிறுத்திய வருவாய்த்துறையினர்
கமுதி அருகே அனுமதியின்றி ஊருணியிலிருந்து சவுடு மண் அள்ளும் பணியை வருவாய்த் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டர்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள எழுவனூர் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 42.97 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி ஆழப்படுத்துதல், மயானச் சுற்றுச்சுவர் அமைத்தல், பள்ளி வளாகத்தில் கழிப்பறை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
நிலையில், அதிகாரிகளின் இதை மதியின்றி பள்ளிமுட்டை ஊருணியிலிருந்து டிப்பர்லாரி மூலம் சவுடு மண்ணை அள்ளி எழுவனூர், கிராமத்துக்கு கொண்டு செல்வதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மண்டலமாணிக்கம், வருவாய்த்துறையினர் தகவல் அளித்தனர்.
போலீஸ் விசாரணை
இதைத்தொடர்ந்து, கூடக்குளம் கிராம நிர்வாக அலுவலர் சாம்போசிவம் உத்தரவின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் செந்தூர்பாண்டி ஊரில் மண் அள்ளப்பட்டது.
இதேபோல, கடந்த மாதம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அனுமதியின்றி எழுவனூர் ஊராட்சிக்குள்பட்ட கல்லத் திகுளம் கண்மாயில் ரூ. 10 லட் சம் மதிப்பீட்டிலான காட்டுக் கருவேல மரங்களை ஊராட்சி நிர்வாகம் வெட்டி விற்பனை செய்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், தற்போது அதே ஊராட்சியில் ஊருணியில் அதிகாரிகளின் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது
ஊருணியிலிருந்து சவுடு மண்ணை வெளியே கொண்டு செல்ல ஊராட்சி நிர்வாகம் எந் தவிதமான அனுமதியும் பெற வில்லை.
விதிகளை மீறி ஞாயிற்றுக் கிழமை ஊருணி ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் .