ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், மற்றும் பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது.
மீன் பிடிக்க தடை
காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் ஏற்கெனவே மீனவர்கள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் விசைப் படகுகள், நாட்டுப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன. மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
கடல் கொந்தளிப்பு
இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால், படகுகள் சேதமடையாமல் இருப்பதற்காக அவற்றை இடைவெளிவிட்டு பாதுகாப்புடன் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
மண்டபம் வடக்குத் துறைமுகத்தில் காற்றின் வேகம் காரணமாக ஒரு படகு கரை ஒதுங்கியது. மீனவர்கள் விரைந்து சென்று படகை மீட்டனர்.