ராமநாதபுரத்தில் விரைவில் மீனவர்கள் குறை கேட்டு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக் கொண்டதினைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 16-12-2022 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
அக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால், இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.