ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை நிபந்தனைகளுடன் அந்தனர். நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.நாகை மாவட்டம் அக்கரைப் பேட்டை மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து செந்தில்குமார் என்பவரின் விசைப்படகில் செல்வக்குமார், ராஜா, பொன்னுராஜா, இளையராஜா, கணபதி, சாய் சிவா, முகேஷ், அரவிந்த், அழகு, வேலு ஆகிய 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
முல்லைத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், திரிகோணமலை நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பயாஸ் ரசாக், மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்து 10 பேரையும் விடுதலை செய்தார். இதையடுத்து, மீனவர்கள் 10 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.