இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக்கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் வலைகளை கடலில் வெட்டி வீசியதால், அவர்கள் செவ்வாய்க்கிழமை கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல், கைது நடவடிக்கைகளை நிறுத்திட, அந்த நாட்டுடன் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், 20- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் வெட்டி வீசினர். இதனால், பல்லாயிரம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கரை திரும்பினர்.