Tuesday, December 5, 2023
Homeராமநாதபுரம்மண்டபம் கலோனியர் பங்களாவில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு 

மண்டபம் கலோனியர் பங்களாவில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு 

தமிழ்நாடு முதலமைச்சர்  இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கலோனியர் பங்களா அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்  விஷ்ணு சந்திரன்,தலைமையில் நடைெற்றது.

நகராட்சி நிர்வாகத்துறை நேரு ,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி  மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை ராஜகண்ணப்பன்  ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சிக்கு தயாராகும் பங்களா

தமிழ்நாடு முதலமைச்சர்  வருகின்ற 17.08.2023 மற்றும் 18.08.2023 ஆகிய இரண்டு தினங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்கள்.18.08.2023 அன்று மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடைபெறும் நிகழ்ச்சியில் மீனவர்களை சந்தித்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments