தமிழ்நாடு முதலமைச்சர் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள் விழா” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்விழாவினை கொண்டாடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-, இரண்டாம் பரிசு ரூ.7000/-, மூன்றாம் பரிசு ரூ.5000/- என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளன.
போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கானத் தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும். இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.