தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளி இராமநாதபுரத்தில் வீழக்காணும் பாடப்பிரிவுகளில் சிறந்த இசையாசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், நாதசுரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன.
- வயது வரம்பு 12 முதல் 25 வயது வரைக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
- கல்வித் தகுதி “குறளிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம்” பிரிவுகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆண் மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொல்லப்படுவார்கள்.
- பயிற்சி காலம் 3 ஆண்டுகள். பயிற்சி கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு (ரூ350ம்), இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ325 மட்டும் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படும்.
- அரசு வழங்கும் சலுகை இலவச பேருந்து பயண அட்டை, கல்வி உதவித்தொகை மாதம் (ரூ.400), அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும்.
- மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும், இந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட திருக்கோவில்களிலும் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. மாணவ மாணவிகள் இசைப் பள்ளியில் சேர்ந்து இசை ஆசிரியர்களாகவும், கலை வல்லுனர்களாகவும் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. இசைக்கல்வியில் ஆர்வமுள்ளவர்கள் மாணவ, மாணவியர்கள் தலைமை ஆசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண் 14, கௌரி விலாஸ் பேலஸ், அரண்மனை இராமநாதபுரம் எண் 623501 என்ற முகவரியிலும்,
தொலைபேசி எண் :
- 04567-220104,
- 99422 67837,
- 94420 4310,
- 97516 74700,
- 95664 73769,
- 99941 34886
தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.