இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக “கல்பனா சாவ்லா விருது” ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்
https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்புகளுடன் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து கருத்துக்களை 27.06.2023ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.