மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்
- வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்), இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும் அல்லது ரேசன் சார்டு),
- தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது) (6மாத கால பயிற்சி),
- வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று,
- சாதிச் சான்று, கடவுச் சீட்டு
- அளவு மனுதாரரின் கலர் புகைப்படம்-2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி
- பெண் சான்று நகல்,
- ஆதார் அடையாள அட்டை
மேற்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை இராமநாதபுரம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், அலுவலகத்தில் 15.09.2023க்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.