Tuesday, October 3, 2023
Homeராமநாதபுரம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 04.07.2023 முதல் ஒருமாத காலத்திற்கு பெங்களூர் பெல் நிறுவனம் மூலம் பொறியாளர்களால் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தரத்தன்மை குறித்து பரிசோதிக்கப்படுகிறது. இந்நிகழ்வின்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பராமரிப்பு பணிகளை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பதுடன் இப்பணிகள் முடியும் வரை முழுமையாக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் இருந்து வருவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) மாரிசெல்வி, வட்டாட்சியர் (தேர்தல்) ரவி  மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments