காரைக்குடி நகராட்சியின் கவனக்குறைவால் பரவி வரும் காய்ச்சல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்டனூர் சாலையில் அமைந்துள்ள பகுதியில் சுற்றுப்புறம் சுகாதாரம் இல்லாத காரணத்தால் பரவி வரும் காய்ச்சல்.
கொசுகளின் உற்பத்தி
காரைக்குடி, கண்டனூர் சாலையில் உள்ள அந்த பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் தொடரும் கனமழை காரணமாக சாலை ஓரங்களிலும் தெருக்களிலும் தேங்கி நிற்கும் மழை நீரினால் கொசு உற்பத்தி ஆகின்றது.இதனால் அப்பகுதியுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காய்ச்சல் பரவி வருகின்றது.
அலட்சியத்தால் வரும் ஆபத்துகள்
காரைக்குடி நகராட்சியால் வடிகால் முறையாக பராமரிக்கப்படாததால், கொசுக்கள் உற்பத்தியாகி, சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது.முக்கியமாக காரைக்குடி, கண்டனூர் சாலை, அதிகபடியான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. என மக்கள் புகார் அளிக்கின்றர்.தினந்தோறும் நகராட்சி நிர்வாகிகள் மக்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் காட்டும் முக்கியத்துவத்தினை அவர்களை சுற்றியுள்ள இடங்கள் என்ன நிலையில் இருக்கின்றது என்பதில் காட்டுவதில்லை என கூறுகின்றன.
மக்களின் கோரிக்கை
வடிகால் முறையை சரியான முறையில் பராமரிக்கப்படாததால், அதில் தேங்கி நிற்கும் நீரினால் சுகாதாரம் இல்லாத நிலையில் ஏற்பாட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதனை பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் சரிசெய்யவில்லை என குறிப்பிடப்படுகிறது . வடிகால் முறையை சரியான முறையில் பராமரிக்கும் படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.