பைக்கில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் அம்மா சாத்தாயி சத்திரக்குடிக்கு சொந்த வேலை காரணமாக செல்வதற்காக டி.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு என்பவரது இருசக்கர வாகனத்தில் டி.கருங்குளம் கிராமத்தில் இருந்து சத்திரக்குடிக்கு செல்லும் போது டி.கருங்குளம் சாலையில் ராஜகுரு அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தை ஓட்டியதில் சாத்தாயி நிலை தடுமாறி சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பின் தலையில் காயம் ஏற்பட்டது.
பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அஜாக்கிரதியாக இரு சக்கர வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திய ராஜகுரு மீது நடவடிக்கை எடுக்குமாறு ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.