Friday, September 22, 2023
Homeராமநாதபுரம்நகைகளின் எடை குறைந்தது தொடர்பாக ஊழியர்களுக்கும் கோயில் நிர்வாகம் நோட்டீஸ்

நகைகளின் எடை குறைந்தது தொடர்பாக ஊழியர்களுக்கும் கோயில் நிர்வாகம் நோட்டீஸ்

நகைகளின் எடை குறைந்தது தொடர்பாக ஊழியர்களுக்கும் கோயில்  நிர்வாகம் நோட்டீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் நகைகளின் எடை குறைந்தது தொடர்பாக ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அபராதம் செலுத்துமாறு கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

41 ஆண்டுகளுக்கு பிறகு சரி பார்க்கப்பட்ட

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் அவர்கள் தரும் காணிக்கைகள் நகையாகவும் வழங்கப்படும். அவற்றின் நகைகள் மட்டும் கோயில் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டும்.இந்த ஆபரணங்கள், கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாக்களின் போது சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்படும். இக்கோயிலில் உள்ளது. பின் அந்த நகைகள் கருவூலத்தில் வைக்கப்படும். நகைகளை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1978ல் நடைபெற்றது. அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பின் 2019-ல்  தான் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் சரிபார்க்கப்பட்டு பின் மதிப்பீடு செய்யப்பட்டது

ஊழியர்களிடையே எதிர்ப்பு

இந்நிலையில், நகைகளில் எடை குறைந்துள்ளது எனக்கூறியுள்ள நிர்வாகம் அது தொடர்பாக அதற்கு அபராதம் செலுத்துமாறு, கடந்த 41 ஆண்டுகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும், தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கும் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையரின் பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கும் நகைகளில் எடை குறைவு ஏற்பட்டதற்கு தாங்கள் மட்டுமே காரணம் எனக்கூறி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியதற்கு ஊழியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் தகவல்  கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments