Thursday, March 28, 2024
Homeராமநாதபுரம்ராமேசுவரத்தில் இரவில் கடைகளை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளது

ராமேசுவரத்தில் இரவில் கடைகளை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளது

ராமேசுவரத்தில் இரவில் கடைகளை  திறந்து வைக்க வாய்ப்பு உள்ளது 

ராமேசுவரத்தில் இரவு நேரத்தில் கடைகளை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரத்தில்உள்ள கடைகளை இரவு நேரத்திலும் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடை திறந்து வைக்க அனுமதி

ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதி மன்றக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவருகள் ராமேசுவரம்பகுதியில்  உள்ள ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என பல உள்ளன. இவை பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக செயல்படுகிறது

கோரிக்கை மனு

இந்நிலையில் ராமேசுவரத்தில் கடைகளை இரவு 10 மணிக்கு வரை மட்டுமே இயங்க வேண்டும் என போலீஸார் அறிவித்துள்ளனர். இதனால்  இரவு நேரங்களில் வரும் பக்தர்களுக்கு மற்றும் பெதுமக்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை

எனவே ராமேசுவரத்தில் இரவு நேரங்களில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில் மகாதேவன்,சத்ய நாராயணபிரசாத், அமர்விற்குவந்தது

நிதிபதிகளின் தீர்ப்பு

ராமேசுவரத்தில் தற்போது கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. இரவு நேரத்தில் கடைகளைத் திறக்க அனுமதித்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் எனவும் இருப்பினும் ராமேசுவரத்தில் இரவு நேரத்தில் கடைகளைத் திறக்க வாய்ப்புள்ளதா? என குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உயர்நீதி மன்றம் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்த வைக்கப்பட்டது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments