உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கமுதியில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் நம்மாழ்வார் வேளாண்மைக் கல்லூரி வேளாண்மை விரிவாக்கத் துறை உதவிப்பேராசிரியர் சுரேஷ்வர்மா, கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சந்தோஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈஸ்வரி உள்ளிட்டோர் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்குப்பயிற்சி அளித்தனர் . இதில், வேளாண் இடுபொருள்களின் இருப்பு விவரம், விலை, மானியங்களின் விவரங்கள், பருவநிலையை அறிந்து உரமிடுதல், வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் பெற முன்பதிவு செய்தல் ஆகியவை குறித்துவிவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணி மொழி,சுபாஸ் சந்திர போஸ் ஆகியோர் செய்தனர். பயிற்சியில், செங்கப்படை,சடையனேந்தல், பேரையூர், அச்சங்குளம், முதல் நாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் கலந்துகொண்டனர்.