பரமக்குடியில் இருசக்கர வாகனம் திருட்டு.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவர் தினமும் பரமக்குடி வந்து வேலை பார்த்துவிட்டு மாலை பரமக்குடி பாரதி நகர் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மறுநாள் தனது இரு சக்கர வாகனத்தை எடுப்பது வழக்கம்.
அதேபோல் இருசக்கர வாகனத்தை ஏப்ரல் 18ஆம் தேதி நிறுத்திவிட்டு நேற்று வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை என முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 19ஆம் தேதி பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் ||பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு தேர்வு