இளையான்குடியில் ஒன்றிய ஆலோசனைக்கூட்டம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வடக்கு ஒன்றிய திமுக, பேரூர் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
முதல்வருக்கு நன்றி தீர்மானம்
கட்சியின் மூத்த உறுப்பினர் புக்குளி முத்துராமலிங்கம் தலைமைவகித்தார். திமுக பேரூர் செயலாளரும்இளையான்குடி பேரூராட்சித் தலைவருமான நஜூமுதீன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில்,திமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மதியரசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில், திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது
இதேபோல,இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழு அமைக்க வேண்டும். திமுகவின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
மேலும் இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச் சாவடி குழு அமைப்பது என்றும், திமுகவின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது எனவும், கூட்டத்தில், திமுக மாவட்ட விவசாய அணி நிர்வாகி காளிமுத்து, மாணவரணி நிர்வாகி சந்திரசேகர், கூட்டுறவு சங்கத் தலைவு தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.