Tuesday, December 5, 2023
Homeஆன்மிகம்உறையூரில் அமைந்திருக்கும் பஞ்சவர்ணேசுவரின் சிவாலயம்

உறையூரில் அமைந்திருக்கும் பஞ்சவர்ணேசுவரின் சிவாலயம்

உறையூர் பஞ்சவர்ணேசுவரர்  கோயில் என்பது  திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும்.

இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார்.

உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.

உறையூர் பஞ்சவர்ணேசுவரர்
உறையூர் பஞ்சவர்ணேசுவரர்

 

சிவஸ்தலம் திரு மூக்கீச்சரம் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்
மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்
அம்மன் காந்திமதியம்மை, குங்குமவல்லி
தீர்த்தம் சிவதீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர் திரு முக்கீச்சரம்
தல விருட்சம் வில்வம்
ஊர் உறையூர்
மாவட்டம் திருச்சி

 

தல வரலாறு

சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர்.

அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது.

அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது.

வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.

உறையூர் பஞ்சவர்ணேசுவரர்

சிறப்புக்கள்

  • நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
  • இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.
  • இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.

உறையூர் பஞ்சவர்ணேசுவரர்

திருத்தலப் பாடல்கள்

“”மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.

விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே”

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments