பரமக்குடியில் விதை விற்பனை நிலையங்கள் திடீர் ஆய்வு
பரமக்குடியில் விதை விற்பனை நிலையங்களை விதைச்சான்று இயக்குனர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாரத்தில் விதை விற்பனை நிலையங்களை விதை சான்று இயக்குனர் வளர்மதி ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் விதைச்சான்று இயக்குனர் வளர்மதி பரமக்குடி பகுதியில் உள்ள உரம் மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையம் அருகே உள்ள கே.எஸ்.ஆர் உரம் மற்றும் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வின் போது, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, விதையின் தரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா என்பதை சரி பார்த்தார். தொடர்ந்து, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரம் மற்றும் விதைகளை விற்பனை செய்ய வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.