சேதமடைந்த சாலை செயல்படாத 2 குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்
முதுகுளத்தூர் அருகே செப்பனிடப்படாத சாலை, பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றை சரி செய்யக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கருமல் ஊராட்சியைச் சேர்ந்தது கருமல் கிராமம். முதுகுளத்தூர்-தேரிருவேலி முக்கியச் சாலையில் இருந்து இக்கிராமத்துக்குச் செல்லதார்ச் சாலை உள்ளது. சுமார் 1.5 கி.மீ. நீள இச்சாலையை 2013-ம் ஆண்டிலிருந்து செப்பனிடவில்லை. அதனால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. கிராம மக்களின் அவசர மருத்துவச்சிகிசைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்துசெல்ல மிகவும் சிரமப்படுகின்றன.
9 ஆண்டுகளாக செப்பனிடாத இக்கிராமச்சாலைஉடனடியாக தர வேண்டும். சாலையை செப்பனிட்டுத் எனக்கோரி, 20 மேற்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த மூதாட்டி’ சேவணி’கூறுகையில், இக்கிராமத்தின் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் பழுதடைந்துள்ளது. மேலும் குடிநீர் ஆதாரமாக இருந்த உப்புநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு மையம் கடந்த 3 ஆண்டுகளாக பழுதாகி
உள்ளது என்றார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் ‘லிதியால் சாந்தகுமாரியிடம்’ கேட்டபோது, கருமல் கிராமச் சாலையை செப்பனிடக் கோரி,
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்முதல் ஆட்சியர் வரை மனு கொடுத்து மேற்கொள்ளப்பவில்லை. தற்போது கிராம மக்களே நேரடியாக ஆட்சியரிடம் இனங்களின் மனு அளித்துள்ளனர். உப்புநீரை நன்னீராக்கும் மையமும் பழுதாகிக் கிடக்கிறது. இதை சரி செய்ய ரூ.5 லட்சம் வரை ஆகும் எனக்கின்றனர். ஊராட்சியில் இவ்வளவு செலவழிக்க நிதி கிடையாது. அதனால் ஆட்சியர் தான் சுத்திகரிப்பு மையத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.