Thursday, September 21, 2023
Homeஅறிந்து கொள்வோம்புதிய வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள 'வாட்ஸ்ஆப்'

புதிய வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள ‘வாட்ஸ்ஆப்’

புதிய வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள ‘வாட்ஸ்ஆப்’

‘வாட்ஸ்ஆப்’ அழைப்புகள் மற்றும் விடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை இணைந்து கொள்ளும் வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய கூடுதல் வசதிகளை வாட்ஸ்ஆப் செயலியை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்தது.

வாட்ஸ்ஆப் செயலில் பயனாளர்களுக்காக கூடுதல் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது அது கூடுதல் வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வசதிகள் படிப்படியாக அடுத்த வாரத்தில் அனைத்துப் பயனாளிகளுக்கும் சென்று சேரும் என்றும் அந்த நிறுவனம்                தெரிவித்துள்ளது.

  • இதுகுறித்து மெட்டா நிறுவனரும் தலைவருமான மார்க் சக்கர் பெர்க் முகநூலில் குறிப்பிட்டுள்ளது.
  • வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வாட்ஸ் ஆப்’ இல் சமூக குழுக்களை அறிமுகம் செய்துள்ளோம்.
  • இதன் மூலமாக,  ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள், துணைக் குழுக்களை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ளவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் விடியோ அழைப்பில் ஒரேநேரத் தில் 32 பேர் வரை இணைந்து கொள்ள முடியும். இவர்களின் உரையாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக பாதுகாப்பட்டதாக இருக்கும்.
  • வாட்ஸ்ஆப் செயலியில் முன்னர் 16 எம்பி அளவிலான ஆவணத்தை மட்டுமே அனுப்ப முடியும் என்றிருந்த நிலையில், தற்போது 2 ஜிபி வரையிலான ஆவணத்தைப் பரிமாற்றம் செய்ய வசதி        செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் 1,024 பேரை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள முடியும்.மேலும், ஒருவர் வாட்ஸ்ஆப் சமூக குழுவில் இடம்பெற்றுள்ள
  • 5,000 பயனாளர்களுக்கு தகவல்களை அனுப்ப முடியும் என்பதோடு, அவர்களுக்குள் கருத்துக் கணிப்புகளை நடத்தும் வசதியும் ஏற்பட்டுள்ளது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments