Tuesday, December 5, 2023
Homeஆன்மிகம்ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது

ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது

  1. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் தொடர்பில் வைத்தே நமக்கு சடங்குகள் ஆகவும் சம்பர்தயமாகவும் கூறியுள்ளனர்.
  2. எதை கூறினாலும், நிச்சயம் அதில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கும். அதில் ஒன்று தான், வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது என்பதாகும்.
  3. ஏன் வீட்டில் விளக்கேற்றிய பின், இரவு நேரத்தில் வீட்டை பெருக்கக் கூடாது? நம் முன்னோர்கள் அவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன? தெரிந்து கொள்வோம் வாங்க..!!

வீட்டை பெருக்குதல்:

  1. வீட்டை பெருக்குதல் என்பது வீட்டில் உள்ள குப்பைகளை வீட்டைவிட்டு அகற்றும் முறையாகும்.
  2. அக்காலத்தில் மின்சாரம் என்பது இல்லை. அதனால் இரவு நேரங்களில் சிறு விளக்கையே பயன்படுத்தினர்.
  3. அத்தகைய சமயங்களில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் அறியாமல் கீழே விழுந்து, அதை சரியான வெளிச்சம் இல்லாமல், கூட்டி பெருக்கி, குப்பையோடு ஒன்றாக கொட்டிவிடுவோம்.
  4. இதனால் விலை உயர்ந்த பொருட்களை நாம் இழக்க நேரிடும். இதுவே நாம் பகல் வேளையில் கூட்டி பெருக்கும்போது, அந்த பொருள் நம் கண்களுக்கு தென்படும்.
  5. இவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காகவே, வீட்டில் விளக்கேற்றிய பின் வீட்டை பெருக்கக் கூடாது.
  6. மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்தனர்.
  7. அதாவது, மகாலட்சுமி என்றாலே செல்வம். செல்வம் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்பதையே இவ்வாறு கூறினர்.
  8. இரவு நேரத்தில் தலை வாரக் கூடாது
  9. இரவு நேரத்தில் வீட்டை பெருக்கக் கூடாது என்பது போலவே, இரவு நேரத்தில் தலை வாரக் கூடாது என்றும் கூறுவார்கள்.
  10. ஏனென்றால், மாலை நேரம் என்பது மகாலட்சுமியை வரவேற்கும் நேரம் என்று கூறுவார்கள்.
  11. இந்த நேரத்தில் முடியை வாரினால் மகாலட்சுமி வீட்டிற்குள் வரமாட்டாள் என்பார்கள்.
  12. ஆனால் உண்மையில் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தார்கள்.
  13. இதனால் இரவு நேரங்களில் தலை வாரினால், அது உணவுகளிலோ, மற்ற இடங்களிலோ விழும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
  14. அவ்வாறு அது உணவுகளில் கலந்தால், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.
  15. இதன் காரணமாகவே, இரவு நேரங்களில் தலை வாரக் கூடாது என்று கூறினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments