Tuesday, March 19, 2024
Homeராமநாதபுரம்உறிஞ்சுக் குழி கழிவறைகள் மாற்றி  மேம்படுத்தப்படும் பணிகள்

உறிஞ்சுக் குழி கழிவறைகள் மாற்றி  மேம்படுத்தப்படும் பணிகள்

உறிஞ்சுக் குழி கழிவறைகள் மாற்றி  மேம்படுத்தப்படும் பணிகள்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சுமார் 15000 ஒரு உறிஞ்சுக் குழி கழிவறைகள் உள்ளன. மேற்படி கழிவறைகளை இரு உறிஞ்சுக் குழி கழிவறைகளாக மாற்றிட பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துவக்கி வைத்த ஆட்சியர்கள்

இந்தப் பணிகளை 2022-23-ம் ஆண்டுக்குள் முழுமையாக முடித்திட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கொத்தனார் பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திறன் வாய்ந்த கொத்தனார்கள் மூலம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் சுந்தரேசன் செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி), முத்துக்குமாரசுவாமி உதவித் திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) மற்றும் நவனீதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

மொத்தம் 137 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டனர். இவர்களுக்கு மற்றும் ஆகிய இரு தினங்கள் ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணியின் தொழில் நுட்பர்கள் குறித்து நேரடிப் பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளது.

கட்டும் பணியில் தீவிரம்

இவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு இரு உறிஞ்சுக் குழி கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபடும் உறுதி மொழி ஒப்பந்த அடிப்படையில் ஊராட்சி மூலமாக சான்றிதழும் வழங்கப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள் அனைவரும் சுகாதாரமான கழிப்பறையை பயன்படுத்திடவும், ஒரு உறிஞ்சுக் குழி அமைந்துள்ள இடங்களில் இரு உறிஞ்சுக் குழி அமைத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு நல்குமாறும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments