பரமக்குடியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு
பரமக்குடி பஸ் நிலையம் எதிரில் அ.தி.மு.க. நகர் அம்மா பேரவை சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பொது மக்களுக்கு நீர், மோர் வழங்கும் பந்தல் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்க்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான் வரவேற்றார்.
மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி நீர், மோர் பந்தலை துவக்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர், மோர் உள்பட பழங்கள் வழங்கப்பட்டது. இதில் பரமக்குடி நகர் செயலாளர் ஜமால், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், நகர் அம்மா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் நாகராஜன், ராஜேந்திரன், திருமுருகன், மருதுபாலா, நாகேந்திரன், வாலா ரவீந்திரன் உள்பட நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான் செய்திருந்தார்.